கடவுளை தரிசிக்க கோவிலில் தங்கிய பெண்!! -சுருண்டு விழுந்து மரணம்-

ஆசிரியர் - Editor II
கடவுளை தரிசிக்க கோவிலில் தங்கிய பெண்!! -சுருண்டு விழுந்து மரணம்-

இந்தியாவின் தெலங்கானாவில் பெண்ணொருவர் கடவுளை தரிசனம் செய்து கொண்டிருந்த போது கோயிலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கடவுள் தரிசனம் காண வந்த பெண்

கரீம் நகர் மாவட்டம் லிங்கப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி. இவர் வெமுலாவாடா ராஜண்ணா கோயிலுக்கு கடவுள் தரிசனம் செய்ய சென்றுள்ளார்.

ஆனால், கூட்டம் அதிகமாக இருந்ததால் அவரால் தரிசனம் செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் இரவு கோயிலிலேயே தங்கியுள்ளார்.

மறுநாள் காலையில் லட்சுமியின் குடும்பத்தினரும் தரிசனத்திற்காக அவருடன் சேர்ந்து வரிசையில் நின்றுள்ளார்.

அப்போது லட்சுமி திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்ட கோயில் பணியாளர்கள் மருத்துவ உதவியை நாடினர். அதனைத் தொடர்ந்து உடனடி மருத்துவ சிகிச்சை லட்சுமிக்கு வழங்கப்பட்டது.

ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். அவரது மரணம் குடும்பத்தினர் மற்றும் கோயிலில் இருந்தவர்களுக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.  

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு