மன்னார் மாவட்டத்தில் சீன அரசாங்கத்தின் மண்ணெண்ணை 2432 பேருக்கு வழங்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
மன்னார் மாவட்டத்தில் சீன அரசாங்கத்தின் மண்ணெண்ணை 2432 பேருக்கு வழங்கப்பட்டது..

மன்னார் மாவட்டத்தில் 2432 கடற்தொழிலாளர்களுக்கு  இன்று திங்கட்கிழமை மண்ணெண்ணெய் வழங்கப்பட்டதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரால்லி டி மெல் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையின் பெயரில் சீன அரசாங்கத்தினால் குறித்த மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலாக பிரிவுகளிலும்  முதற்கட்டமாக 75 லீட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படுவதோடு இரண்டாம் கட்டமாக  75 லீட்டரும் வழங்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு