வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணின் வங்கி அட்டையை திருடி நகை வாங்கிய கிளிநொச்சியை சேர்ந்த 24 வயதான பெண் கைது!!

ஆசிரியர் - Editor I
வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணின் வங்கி அட்டையை திருடி நகை வாங்கிய கிளிநொச்சியை சேர்ந்த 24 வயதான பெண் கைது!!

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த பெண் ஒருவருடைய வங்கி அட்டையை திருடி அந்த அட்டையை பயன்படுத்தி தங்க நகைகளை கொள்வனவு செய்த 24 வயதுடைய பெண்ணொருவர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதான பெண் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். குறித்த பெண் வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அங்கு டெபிட் கார்ட்டை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடமிருந்து 2 வளையல்கள், ஒரு சங்கிலி மற்றும் 2 காதணிகளை மீட்டுள்ளதுடன், பல தங்க நகைகளை அடகு வைத்தமைக்கான பற்றுச்சீட்டு ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு