ஒடிசா ரெயில் விபத்து! -அதிகரிக்கும் உயிரிழப்புகள்; மீட்பு பணிகள் தீவிரம்-

ஆசிரியர் - Editor II
ஒடிசா ரெயில் விபத்து! -அதிகரிக்கும் உயிரிழப்புகள்; மீட்பு பணிகள் தீவிரம்-

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

பலர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில் விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. 

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று சனிக்கிழமை காலை நிலவரத்தின் படி, பலி எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. 900  பேர் காயம் அடைந்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு