இலங்கை அணியில் மதீஷ பத்திரன சேர்ப்பு

ஆசிரியர் - Editor II
இலங்கை அணியில் மதீஷ பத்திரன சேர்ப்பு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை வெள்ளிக்கிழமை ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகவுள்ளது.

இதில் இலங்கை அணியில், தசுன் ஷானக்க (அணித்தலைவர்), பத்தும் நிஷங்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ் (துணை தலைவர்), அஞ்சலோ மெத்தியூஸ், சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, சாமிக்க கருணாரத்ன, தசுன் ஹேமந்த, வனிந்து ஹசரங்க, லஹிரு குமார, துஷ்மந்த சமீர, கசுன் ராஜித, மதீஷ பத்திரன, மஹீஷ் தீக்‌ஷன அகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

வனிந்து ஹசரங்க தற்போது காலில் ஏற்பட்ட காயத்திற்காக சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சையின் பின்னர் விளையாட தகுதி பெற்றவுடன் இணைந்துகொள்ளவுள்ளார். குசல் ஜனித் பெரேரா நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒருநாள் தொடருக்கு அவர் தெரிவு செய்யப்படவில்லை.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு