பூநகரியில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்த அதாணி குழுமத்திற்கு எதிர்ப்பு! இன்றைய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் அனுமதி மறுப்பு...

ஆசிரியர் - Editor I
பூநகரியில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்த அதாணி குழுமத்திற்கு எதிர்ப்பு! இன்றைய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் அனுமதி மறுப்பு...

கிளிநொச்சி - கெளதாரிமுனையில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமைப்பதற்கு இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

அதாணி குடும்பத்தினால் பூநகரி - கௌதாரிமுனை பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு அபிவிருத்திக் குழுவின் அனுமதிக்காக எடுக்கப்பட்டது. 

இதன்போது திட்டம் தொடர்பாக கடுமையான வாதங்கள் இடம்பெற்றன. திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் கௌதாரி முனைக்கு செல்லும் பிரதான வீதி தொடர்பில் சர்ச்சை எழுந்தது. 

மேற்படி வீதியை காபெட் வீதியாக அமைப்பது தொடர்பில் எவ்வித உறுதிகளும் வழங்கப்படவில்லை எனவும், அப்பகுதி மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படக்கூடாது எனவும் மக்கள் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் முறையான நடைமுறைளை பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும், அதன் தொடர்ச்சியாகவே குறித்த திட்டத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் தீர்மானிக்க முடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு