மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர்கள்!! -நெரிசலில் சிக்கிய 12 பேர் மரணம்-

ஆசிரியர் - Editor II
மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர்கள்!! -நெரிசலில் சிக்கிய 12 பேர் மரணம்-

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான எல் சால்வடாரின் தலைநகர் சான் சால்வடாரில் கஸ்கட்லான் கால்பந்து மைதானம் உள்ளது. இங்கு சல்வடார் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

தொடரில் காலிறுதி போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை காண வந்த ரசிகர்கள் நுழைவு டிக்கெட் வைத்திருந்தும், மைதானத்தினுள் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த ரசிகர்கள் குறிப்பிட்ட நுழைவு வாயிலை தகரத்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றனர். 

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைய முயன்றதை அடுத்து, அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 12 பேர் உயிரிழந்த நிலையில், 100க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு