கழிவறையில் பிறந்த சிசு!! -ஜன்னல் வழியாக குழந்தையை தூக்கி வீசிய கொடூர தாய்-

ஆசிரியர் - Editor II
கழிவறையில் பிறந்த சிசு!! -ஜன்னல் வழியாக குழந்தையை தூக்கி வீசிய கொடூர தாய்-

இந்தியாவின் கொல்கத்தாவில் கழிவறையில் குழந்தை பிரசவித்த பெண் ஒருவர் குழந்தையின் அழுகையால் கோபம் அடைந்து, ஜன்னல் வழியாக தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவின் கஸ்பா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 22 ஆம் திகதி தனது குழந்தையை பிரசவித்துள்ளார். அது தனது வீட்டின் கழிவறையில் எவருக்கும் தெரியாமல் நடந்துள்ளது.

பிறந்த தனது குழந்தை அழ ஆரம்பித்ததால், கழிவறையின் ஜன்னலை உடைத்து வெளியே வீசியுள்ளார்.

அயலில் உள்ளவர்கள் சத்தம் கேட்டு பதறி வந்து பார்த்த நிலையில் குழந்தையையும் தாயையும் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் கர்ப்பமாக இருந்தது அவருக்கே தெரியாது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் தாய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு