முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது!

முன்னாள் விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
பொலிஸின் கூற்றுப்படி, கொழும்பு திம்பிரிகஸ்யாயவில் உள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வைத்து முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டார்.
சமீபத்தில் வெள்ளவத்தையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 ரக துப்பாக்கி தொடர்பில் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வார தொடக்கத்தில் கொழும்பில் உள்ள ஹேவலோக் சிட்டி வீட்டு வளாகத்தின் ஒரு குடியிருப்பில் இந்த ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர், செவ்வாய்க்கிழமை 40 மற்றும் 68 வயதுடைய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த துப்பாக்கி தொடர்பான விசாரணைகளை பொலிஸ் நேற்று பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் (TID) ஒப்படைத்தது.