ஐ.பி.எல் தொடரின் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது சி.எஸ்.கே

ஆசிரியர் - Editor II
ஐ.பி.எல் தொடரின் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது சி.எஸ்.கே

16 ஆவது ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் கொல்கத்தாவில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 33 ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. 

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்ச முடிவு செய்தது. அதன்படி, சி.எஸ்.கே அணி முதலில் களமிறங்கியது. சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப் பரிமாற்றங்களில் 4 இலக்குகளுக்கு 235 ஓட்டங்களை குவித்தது. இதையடுத்து, 236 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. 

போட்டியின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் வெறும் 186 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. 

இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தலாக வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. 6 போட்டிகளின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருந்தது. 

நேற்றைய 7 ஆவது ஆட்டத்தில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு