பொது இடத்தில் சிறுநீர் கழிக்கவேண்டாம் என கூறிய வர்த்தகர் மீது ரவுடிகள் தாக்குதல்..!

ஆசிரியர் - Editor I
பொது இடத்தில் சிறுநீர் கழிக்கவேண்டாம் என கூறிய வர்த்தகர் மீது ரவுடிகள் தாக்குதல்..!

வர்த்தக நிலையத்திற்கு முன்பாக சிறுநீர் கழிக்கவேண்டாம். என கூறிய வர்த்தகர் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது, இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக மூவர் அடங்கிய ரௌடி கும்பல் ஒன்று சிறுநீர் கழித்துள்ளனர்.

இதன்போது குறித்த வர்த்தகர் இவ்விடத்தில் சிறுநீர் கழிக்காது அருகில் உள்ள பொது கழிப்பறைக்கு செல்லுங்கள் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ரௌடி கும்பல் வர்த்தகர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றபோது அருகில் உள்ள வர்த்தக நிலையத்தினர் 

உட்பட பலரும் வேடிக்கை பார்த்த போதிலும் எவரும் தடுப்பதற்கு முற்படாத நிலையில் தாக்குதல் படுகாயமடைந்த வர்த்தகர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், ஏனைய இருவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு