கர்ப்பிணி பெண் மற்றும் அவருடைய தாயாரை வாளால் வெட்டிவிட்டு வழிப்பறியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

ஆசிரியர் - Editor I
கர்ப்பிணி பெண் மற்றும் அவருடைய தாயாரை வாளால் வெட்டிவிட்டு வழிப்பறியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

கர்ப்பிணி பெண் மீதும் அவருடைய தாயார் மீதும் வாள்வெட்டு தாக்குதல் நடத்தி நகை மற்றும் பணத்தை வழிப்பறி செய்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் இன்று (18) தெரிவித்தனர். 

புத்தாண்டு தினத்தன்று இரவு 8.30 மணியளவில் வவுனியாவில் இருந்து பூவரசன்குளம் நோக்கிச் மோட்டர் சைக்கிளில் சென்ற 8 மாத கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது தாயார் மீது பம்மைமடுப் பகுதியில் வைத்து வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் 

அவர்கள் அணிந்திருந்த 6 அரைப் பவுண் நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் காசு என்பன கொள்ளையிடப்பட்டிருந்தன. காயமடைந்த கர்ப்பிணிப் பெண் மற்றும் தாய் ஆகியோர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பூவரசன்குளம் பொலிசார் 30 வயதுடைய இளைஞர் கைது செய்துள்ளதாகவும், விசாரணைகளின் பின் அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு