20 வயதான இளைஞருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக சந்தேகம்! பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து பேக்கரி உரிமையாளர் கைது...

ஆசிரியர் - Editor I
20 வயதான இளைஞருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக சந்தேகம்! பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து பேக்கரி உரிமையாளர் கைது...

ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாக சந்தேகத்தில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பேக்கரி உரிமையாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய பேக்கரி உரிமையாளர், 

தனது பேக்கரி வேலைகளுக்காக திருகோணமலை பிரதேசத்தில் இருந்து 20 வயது இளைஞர் ஒருவரை அழைத்துவந்து, தனது விடுதியில் தங்கவைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு அப்பகுதி மக்கள் பேக்கரி உரிமையாளரின் நடத்தையை அவதானித்துவிட்டு, பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, 

அவ்விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார் பேக்கரி உரிமையாளரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்ததுடன், குறித்த இளைஞரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

இதேவேளை கைதானவர் நேற்றுமுன்தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது 

அவரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு