சண்டியர்களாக மாறிய சிறுவர்கள்! வீடு புகுந்து தாக்குதல் நடத்திய 17 வயது சிறுவன் உள்ளிட்ட குழு, 16 வயது சிறுவன் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
சண்டியர்களாக மாறிய சிறுவர்கள்! வீடு புகுந்து தாக்குதல் நடத்திய 17 வயது சிறுவன் உள்ளிட்ட குழு, 16 வயது சிறுவன் படுகாயம்..

பாடசாலை சிறுவர்கள் இருவருக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தின் தொடர்ச்சியாக 16 வயதான சிறுவன் மீது 17 வயது சிறுவன் மற்றும் சிலர் இணைந்து வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். 

சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். 

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றுமுன்தினம் (15) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் இரு வேறு பிரபல பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் இருவருக்கு இடையே கடந்த சில நாட்களாக வாய்த்தர்க்கம் ஏற்பட்டு முரண்பாடு நிலவியது. 

இவ்வாறு முரண்பட்டுக்கொண்ட இரு தரப்பு மாணவர்களும் 16, 17 வயதானவர்கள் ஆவர். இந்நிலையில் இரண்டு மாணவர்களின் மத்தியிலும் கைகலப்பு ஏற்பட்டபோது மாணவர் ஒருவரின் பெற்றோர் தலையிட்டு சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். 

அதன் பின்னர் நேற்று (15) மாலை வவுனியா, வேப்பங்குளத்தில் உள்ள குறித்த மாணவரின் வீட்டுக்குள் நுழைந்த மற்றைய மாணவர் உள்ளிட்ட சிலர், வீட்டிலிருந்த மாணவர் மீது தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

இதனால் காயமடைந்த மாணவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு