கர்ப்பவதி பெண் மற்றும் அவருடைய தாயார் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தி வழிப்பறி..! இருவரும் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
கர்ப்பவதி பெண் மற்றும் அவருடைய தாயார் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தி வழிப்பறி..! இருவரும் படுகாயம்..

வீதியால் சென்று கொண்டிருந்த கர்ப்பவதி பெண் மீதும், அவருடைய தாயார் மீதும் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் 6 பவுண் நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். 

குறித்த சம்பவம் புத்தாண்டு தினத்தில் வவுனியா - பம்பைமடு பகுதியில் இம்பெற்றுள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். 

சம்பவத்தில் காயமடைந்த 8 மாத கர்ப்பிணிப் பெண்ணும், தாயும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு