இரணைமடு குளத்தின் தெற்குப் பகுதியில் மிகப்பெரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை நடக்கிறது!! அப்படி எதுவும் இல்லை என்றால் நாங்கள் நேரடியாக சென்று பார்க்க அனுமதியுங்கள்..

ஆசிரியர் - Editor I
இரணைமடு குளத்தின் தெற்குப் பகுதியில் மிகப்பெரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை நடக்கிறது!! அப்படி எதுவும் இல்லை என்றால் நாங்கள் நேரடியாக சென்று பார்க்க அனுமதியுங்கள்..

இரணைமடு குளத்தின் தெற்குப் பகுதியில் 2009ம் ஆண்டுக்கு பின்னர் மிகப்பெரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை நடப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார். 

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி அலுவலகமான அறிவகத்தில் நேற்று (15) மாவட்டத்தின் கட்சி அமைப்பாளர்கள், வேட்பாளர்கள், பிரதிநிதிகள் பொதுமக்களுடனான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. 

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

அவர் மேலும் பேசுகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கின்ற வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பதிலும், நிலங்களை சுவீகரிப்பதிலுமே இந்த அரசாங்கம் குறியாக இருந்து வருகின்றது.

குறிப்பாக, பூநகரி பிரதேசத்தில் அட்டை பண்ணைகள், இறால் பண்ணைகள் என்கிற பெயரில் காணிகள் அபகரிக்கப்படுகின்றன என்றார். 

இதன்போது, கிளிநொச்சியின் மண்டலாய், புல்லாவெளி ஆகிய பகுதிகளிலும், இரணைமடுக் குளத்தின் தெற்கு பகுதியிலும் சீன அரசாங்கத்துக்கு காணிகளை வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக வெளியான செய்தி தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்டபோது அவர் பதிலளிக்கையில்

,2009ஆம் ஆண்டு யுத்தத்துக்கு பின்னர் இரணைமடுவின் தெற்கு பகுதியை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருப்பதுடன், காடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. 

குறிப்பாக, அந்த பகுதியில் இருக்கின்ற காணிகளை ஆக்கிரமித்து, சிங்கள குடியேற்றங்கள் நிறுவப்படுகின்றன அல்லது மறைமுகமாக காணிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

குறித்த பிரதேசங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் சென்று உண்மைகளை அறிவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த முடியுமா என வினா தொடுத்துள்ளார். 

இந்த கலந்துரையாடலில் வட மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன், பூநகரி பிரதேச சபை தவிசாளர் சிறிறஞ்சன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் சுரேன் 

மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு