நாடுகளுக்கு காணி வழங்குவதில்லை, முதலீட்டாளர்களுக்கே வழங்கப்படும்! இரணைமடுவில் சீனாவுக்கு 700 ஏக்கர் காணி விவகாரம் குறித்து ஆளுநர் ஜீவன்..

ஆசிரியர் - Editor I
நாடுகளுக்கு காணி வழங்குவதில்லை, முதலீட்டாளர்களுக்கே வழங்கப்படும்! இரணைமடுவில் சீனாவுக்கு 700 ஏக்கர் காணி விவகாரம் குறித்து ஆளுநர் ஜீவன்..

அரசாங்கம் நாடுகளுக்கு காணி வழங்குவதில்லை சரியான முதலீட்டாளர்களை இனம் கண்டு அவர்களின் திட்டங்களுக்கே தேவையான காணியை வழங்குவதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை வடமாகாண ஆளுநர் செயலகம், யாழ்.மாவட்ட செயலகம், 51வது காலாட்படை ஆகியன இணைந்து யாழ்.துரைப்பா விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற புதுவருட விழாவில் கலந்து கொண்டிருந்த ஆளுநரிடம், 

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வடக்கில் சீனாவுக்கு 700 ஏக்கர் நிலம் வழங்கப்பட உள்ளதாக கருத்து தெரிவித்திருக்கிறார் அது பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரியுமா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், சிறிதரன் கருத்தை நான் அறியாத நிலையில் அவருடைய கருத்துத் தொடர்பில் பதில் கூற முடியாது.

அரசாங்கத்தை பொறுத்தவரையில் நாட்டை பொருளாதார நிதியில் முன்னேற்றுவதற்கான தேவைப்பாடுகள் இருக்கும் நிலையில் முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து பல முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பும் நிலையில் அவர்களின் சரியான திட்டங்களுக்கு அரசாங்கம் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கிறது.

வடக்கில் முதலீடு செய்வதற்காக தற்போதைய சூழ்நிலையில் யாரும் விண்ணப்பித்துள்ளார்களா என்பது தொடர்பில் எனக்குத் தெரியாது. அவ்வாறு விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கு தேவையான காணிகளை 

இனம் கண்டு கொடுப்பதற்கு மாவட்ட செயலகம் மற்றும் மாகாண காணித் திணைக்களம் அதற்கான பணிகளைச் செய்வார்கள். ஆகவே அரசாங்கம் காணி வழங்குவதாயின் நாடுகளுக்கு காணிகளை வழங்குவதில்லை. 

நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக முதலீட்டாளர்களுக்கே காணிகளை வழங்குவதாக ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு