காத்தான்குடியில் காணாமல்போன 10ம் வகுப்பு மாணவி யாழ்ப்பாண காதலனுடன் கைது!

ஆசிரியர் - Editor I
காத்தான்குடியில் காணாமல்போன 10ம் வகுப்பு மாணவி யாழ்ப்பாண காதலனுடன் கைது!

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் காணாமல்போன 10ம் வகுப்பு மாணவி தனது காதலனுடன் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள தோட்டம் ஒன்றில் வைத்து நேற்று மாலை மீட்க்கப்பட்டிருக்கின்றார். 

குறித்த மாணவி தனது காதலன் சகிதம் இருந்த நிலையிலேயே மீட்க்கப்பட்டுள்ளதுடன், மாணவி வைத்திய பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த காதலன் காத்தான்குடியில் கைத்தொழில் நிலையமொன்றினை நடாத்திவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி பிரதேசத்தில் 

10 ஆம் ஆண்டு கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவி வீட்டில் படித்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போயிருந்ததாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் நேற்று முன்தினம் (10) 

முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு