உரிய அனுமதியற்ற முன்பள்ளியில் மதமாற்ற செயற்பாடா? வலய கல்வி பணிமனை உடந்தையா? மக்கள் கேள்வி..

ஆசிரியர் - Editor I
உரிய அனுமதியற்ற முன்பள்ளியில் மதமாற்ற செயற்பாடா? வலய கல்வி பணிமனை உடந்தையா? மக்கள் கேள்வி..

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்புப் பகுதியில் "நொக்ஸ் " என்ற பெயரில் இயங்கும் கிறிஸ்தவ முன்பள்ளி முல்லைத்தீவு வலையக்கல்விப் பணிமணையின் உரிய அனுமதிகள் இன்றிச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. 

புதுக்குடியிருப்பு - வற்றாப்பளை வீதியில் அமைந்துள்ள குறித்த முன்பள்ளியில் கற்பித்தல் என்ற போர்வையில் மதமாற்ற செயற்பாடுகள் இடம்பெறுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. 

முன் பள்ளியானது கல்வித் திணைக்களத்தின் உரிய அனுமதிகள் பெறப்படாத நிலையில் வெளிமாகாணங்களில் இருந்து சிறுவர் சிறுமிகள் அழைத்து வரப்பட்டு கட்டாய மதமாற்றத்திற்கு நிர்பந்திக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றிய உயர் அதிகாரியின் பின்னணியில் குறித்த சிறுவர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அதன் காரணமாக அதிகாரிகள் கேள்வி கேட்க முடியாத சூழல் உருவாகியதாகவும் கூறப்படுகிறது.

விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு முல்லைதீவு வலயக் கல்விப் பணிப்பாளர் தமிழ்மாறனை அலுவலக இலக்கத்திற்கும் பிரத்தியோக இலக்கத்துக்கும் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

எனினும் மாகாண கல்வித் திணைகளத்தை தொடர்பு கொண்டபோது குறித்த கிறிஸ்தவ இல்லத்தில் முன்பள்ளி நடாத்துவதற்கு தம்மிடம் அனுமதி பெறப்படவில்லை என தொிவிக்கப்பட்டது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு