டோனிக்கு வந்த புதிய சிக்கல்

ஆசிரியர் - Editor II
டோனிக்கு வந்த புதிய சிக்கல்

சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் 4 வருடங்களின் பின்  ஐ.பி.எல் போட்டியில் கால்பதித்த டோனி தொடர்ந்து 2 சிக்சர்கள் விளாசி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

அதேநேரத்தில், முதல் இரு ஆட்டத்திலும் அகலப்பந்து, முறையற்ற பந்து மூலம் பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் என்ற முறையில் டோனிக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது.

தாமதமாக பந்து வீசும் நிலை நீடித்தால் அணித்தலைவர் அபராதம் மற்றும் தடை நடவடிக்கைக்குள்ளாக நேரிடும். 

அதாவது ஒரு சீசனில் ஒரு அணி 3 முறை மெதுவாக பந்துவீசும் முறைப்பாட்டில் சிக்கினால் அணித்தலைவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.

இந்நிலையில்தான் டோனி பந்து வீச்சாளர்களை கண்டித்திருந்தார். போதிய அனுபவம் இல்லாத வேகப்பந்து வீச்சாளர்கள் துஷர் தேஷ்பாண்டே 5 அகலப்பந்துகள், 4 முறையற்ற பந்தும். ராஜ்வர்தன் ஹேங்கர்கேகர் 6 அகலப்பந்துகளும், ஒரு முறையற்றபந்தும் வீசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அணி தனது 3 ஆவது போட்டியில் எதிர்வரும் சனிக்கிழமை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்சை எதிர்கொள்கிறமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு