பால் விஷமானதால் முன்பள்ளி சிறார்கள் 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

ஆசிரியர் - Editor I
பால் விஷமானதால் முன்பள்ளி சிறார்கள் 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

முன்பள்ளியில் வழங்கப்பட்ட பால் விஷமானதால் 13 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் வலய பணிமனையால் வழங்கப்பட்ட பாலினால் குறித்த ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

வீட்டுக்கு சென்ற குழந்தைகள் வாந்தி உள்ளிட்ட அறிகுறிக்குள்ளாகினர். இதனால் அச்சமடைந்த பெற்றோர் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் 13 சிறார்கள் இவ்வாறு அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் தொடர்ந்தும் விடுதியில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

குறித்த பால் பக்கட் காலாவதி ஆகவில்லை எனவும், பரிசோதனைக்காக பொரளையில் உள்ள பரிசோதனை நிலையத்துக்கு உடனே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக 

மாவட்ட வைத்தியசாலை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது. தி. திபாகரன், M.A.

மேலும் சங்கதிக்கு