தினசரி உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணிக்கும் செட்டிகுளம் மக்கள்!

ஆசிரியர் - Editor I
தினசரி உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணிக்கும் செட்டிகுளம் மக்கள்!

வவுனியா நகரில் இருந்து தினசரி செட்டிகுளம் செல்லும் பயணிகள் பேருந்தில் போதிய இடவசதி இன்மையால் பேருந்தின் வெளிப்புறத்திலும் தொங்கிக்கிக் கொண்டு உயிராபத்தான பயணத்தை தினசரி மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வசிப்பவர்கள் தனியார் வேலைவாய்ப்புக்கள், சந்தை நடவடிக்கைகள், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள், அரச வேலை என தினமும் பலரும் வவுனியா நகருக்கு வந்து செல்கிறார்கள். 

இவ்வாறு வந்து செல்பவர்கள் மாலை வேளை நகரில் இருந்து செட்டிகுளம் நோக்கி திரும்பும் போது போதிய வாகன வசதி இன்மையால் பேருந்தில் தமது உயிரை கையில் பிடித்தபடி பயணித்ததை அவதானிக்க முடிகின்றது.


அதிகரித்த பயணிகள் காரணமாக பேருந்தில் போதிய இடவசதி இன்மையால் பேருந்தில் தொங்கிய படியும், அதன் பின்பகுதி, மேற்பகுதி என பல பகுதிகளிலும் உயிருக்கு அச்சுறுத்தலான, ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். 

எனவே குறித்த பகுதிக்கு மாலை நேரத்தில் போதியளவிலான பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்ப்பட வேண்டும் என்பதும் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளின் கோரிக்கையாகவுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு