மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை பாதிக்கும் எந்தவொரு செயற்பாட்டுக்கும் அனுமதியில்லை!!

ஆசிரியர் - Editor I
மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை பாதிக்கும் எந்தவொரு செயற்பாட்டுக்கும் அனுமதியில்லை!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களை அரச பேருந்துகள் தொடர்ச்சியாக ஏற்றாது செல்வது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், A9 வீதியில் அமைந்துள்ள பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களை இ.போ.ச பேருந்துகள் ஏற்றாது செல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

மாணவர்களின் கற்பதற்கான உரிமையை பறிப்பதற்கோ அல்லது தடைகளை ஏற்படுத்துவதற்கோ துணை நிற்பதை அனுமதிக்க முடியாது.A9 வீதியில் பயணிக்கும் அரச பேருந்துகள் மாணவர்களை ஏற்றாது செல்வது தொடர்பில் 

எனக்கு முறைப்பாடுகள் கிடைத்த நிலையில் உரிய தரப்பினர்களை நடவடிக்கை எடுக்கப் பணித்துள்ளேன். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்தி அலுவலகமும் குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது.

மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை தடையின்றி மேற்கொள்வதற்கு வடமாகாண கல்வி அமைச்சர் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை ஆகியன தமது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஆகவே மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்காமல் இருப்பதற்கு உரிய தரப்பினர் தமது பொறுப்புக்களை உணர்ந்து செயல்படாவிட்டால் நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு