6 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு மரண தண்டனை!! -கடுமையாக மனித உரிமை மீறலில் ஈடுபட்ட வடகொரியா-

ஆசிரியர் - Editor II
6 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு மரண தண்டனை!! -கடுமையாக மனித உரிமை மீறலில் ஈடுபட்ட வடகொரியா-

வடகொரியவில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தென்கொரியா வெளியிட்ட அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. அங்கு ஜனாதிபதியாக உள்ள கிம் ஜாங் உன் பல்வேறு அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், வடகொரியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற மனித உரிமை மீறல் பற்றிய அறிக்கையை தென்கொரியா வெளியிட்டுள்ளது. 

அதில், சிறுவர்களுக்கு மரண தண்டனை, 6 மாத கர்ப்பிணிக்கு மரண தண்டனை போன்ற மிக கொடூரமான மனித உரிமை மீறலில் வடகொரியா விதித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

அதே போல், உயரம் குறைவான பெண்களுக்கு கருப்பைகள் அகற்றப்பட்டதாகவும் பரபரபப்பு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு