பாடசாலை வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய குண்டர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துங்கள்!! பொலிஸ் மா அதிபரிடம் ஆளுநர் வலியுறுத்தல்...

ஆசிரியர் - Editor I
பாடசாலை வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய குண்டர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துங்கள்!! பொலிஸ் மா அதிபரிடம் ஆளுநர் வலியுறுத்தல்...

கிளிநொச்சி - சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய விளையாட்டுப் போட்டியில் குண்டர்கள் அட்டகாசம் புரிந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு பொலிஸ்மா அதிபரிடம் வடமாகாண ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் வியாழக்கிழமை கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்தது. 

இதன்போது திடீரென பாடசாலைக்குள் நுழைந்த நபர்கள் மாணவர்கள் மீதும் அங்கிருந்தவர்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டனர். குறித்த சம்பவத்தில் காயமடைந்த மாணவி அடங்கலாக ஐவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநரின் கவனத்துக்கு சென்ற நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய குண்டர்கள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு