கள் ஏற்றிச் சென்ற லொறியும் - மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து! ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி...

ஆசிரியர் - Editor I
கள் ஏற்றிச் சென்ற லொறியும் - மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து! ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி...

கள் ஏற்றிச் சென்ற லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் வட்டவளை - தியகல பகுதியில் நேற்று மாலை 3.30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. 

சம்பவத்தில் மொரகஹாபள்ளம பிரதேசத்தைச் சேர்ந்த பிரதிப் குமார அஸ்விஸ் (வயது - 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குளியாப்பிட்டிய பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்துகொண்டிருந்த லொறியும், ஹட்டனில் இருந்து கினிகத்தேன நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுமே விபத்துக்குள்ளாகியுள்ளன.

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை, தியகல பகுதியில் வைத்தே இன்று பிற்பகல் 3.30 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து நடைபெறும்போது வட்டவளை பகுதியில் மழையுடனான காலநிலை நிலவியுள்ளது.

எனவே, மோட்டார் சைக்களில் வந்தவர் வழுக்கிச்சென்று, லொறியின் பின்பகுதி சிக்கில் சிக்குண்டார் என தெரியவந்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு