காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியின் தாய்க்கு வாளை காட்டி அச்சுறுத்திய காதலன் உட்பட இருவர் சிக்கினர்!

ஆசிரியர் - Editor I
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியின் தாய்க்கு வாளை காட்டி அச்சுறுத்திய காதலன் உட்பட இருவர் சிக்கினர்!

17 வயதான தனது மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாய்க்கு வாளை காட்டி அச்சுறுத்திய காதலன் உட்பட இருவர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

பாடசாலை ஒன்றில் கல்விகற்றுவரும் சிறுமியை அதே தரத்தில் கல்வி கற்றுவரும் சிறுவன் ஒருவன் காதலித்து வந்துள்ளார்.

இதனை அறிந்த சிறுமியின் தாயார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, 17 வயதுடைய காதலனும் அவனது நண்பனும் சேர்ந்து வாள் மற்றும் பஞ்ச சக்கரம் கொண்ட கூரிய ஆயுதத்துடன் படம் எடுத்து அதற்கு வீரம் கொண்ட பாடல்களை பதிவு செய்து கையடக்க தொலைபேசியில் டிக்டொக்கில் பதிவிட்டு சிறுமியின் தாயாரை அச்சுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டையடுத்து, சம்பவதினமான சனிக்கிழமை காலையில் 17 வயதுடைய இருவரையும பொலிஸார் கைது செய்து விசாரணையின் பின்னர் வாக்கு மூலம் பதிவு செய்து எச்சரித்து மாலையில் விடுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு