பெண் கொலை வழக்கு!! -கிளி வழங்கிய சாட்சியத்தால்இருவருக்கு ஆயுள் தண்டனை-

ஆசிரியர் - Editor II
பெண் கொலை வழக்கு!! -கிளி வழங்கிய சாட்சியத்தால்இருவருக்கு ஆயுள் தண்டனை-

குடும்பப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கிளி வழங்கிய சாட்சியத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த விஜய் ஷர்மா என்பவரது மனைவி நீலம் ஷர்மா 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 20 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார். அன்றைய தினம் வீட்டில் தனியாக இருந்த அவர் மர்மநபர்கள் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

மேலும் வீட்டில் இருந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் கொலையாளிகள் குறித்து எந்த தடயமும் கிடைக்கவில்லை. இந்நிலையில் விஜய் ஷர்மா வீட்டில் வளர்த்து வந்த அவரது செல்ல கிளி நீலம் ஷர்மாவின் கொலைக்கு பின் சாப்பிடாமல் அமைதியாக இருந்தது.

இதைப்பார்த்த அவரின் கணவர் கொலையை கிளி நேரில் பார்த்திருக்கலாம் என சந்தேகப்பட்டார்.  இதனால் அவர் சந்தேகப்படும் சில நபர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக கிளியிடம் கூறினார். அப்போது அவர் தனது மருகமன் ஆசு பெயரை கூறிய போது கிளி ஆவேசமடைந்து ஆசு.. ஆசு... என கத்தியது.

இதுகுறித்து விஜய் ஷர்மா பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். உடனே பொலிஸாரும் கிளி முன்பு பலரின் பெயர்களை கூறிய நிலையில் ஆசுவின் பெயரை கூறிய போது மட்டும் கிளி கத்தியது. இதையடுத்து பொலிஸார் ஆசுவை பிடித்து விசாரித்தனர்.

அப்போது ஆசு தனது நண்பர் ரோனியுடன் சேர்ந்து நீலம் ஷர்மாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் சிறப்பு நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் 2 பேருக்கும் தலா 72 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தும் அவர் தீர்ப்பு கூறினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு