கஞ்சா வியாபாரம் செய்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட இருவர் கைது! வடக்கில் இடம்பெற்ற சம்பவம்...

ஆசிரியர் - Editor I
கஞ்சா வியாபாரம் செய்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட இருவர் கைது! வடக்கில் இடம்பெற்ற சம்பவம்...

கஞ்சா விற்பனை செய்த பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட இரு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

கைது செய்யப்பட்ட இரு பொலிஸ் அதிகாரிகளும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பளை பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் பியகம மதுவரி திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

மதுவரி திணைக்களத்தினர் நடத்திய சோதனையில், அவர்களிடம் இருந்து 2 கிலோ 250 கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருந்து.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு