நிலநடுக்கத்தில் இருந்து தப்பிய தளபதியின் லியோ படக்குழு

ஆசிரியர் - Editor II
நிலநடுக்கத்தில் இருந்து தப்பிய தளபதியின் லியோ படக்குழு

காஷ்மீரில் படப் பிடிப்பில் ஈடுபட்டிந்த, 'லியோ' படக்குழுவினர் அங்கு திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருந்து தப்பியுள்ளனர். இந்நிலையில் தளபதி விஜய் நேற்று முன் தினம் சென்னை திரும்பினார்.

தளபதி விஜய், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கும், 'லியோ' படத்தை, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்து வந்தது.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை ஆப்கானிஸ்தானில், 6.8 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ஆப்கானிஸ்தான் சுற்றியுள்ள சில நாடுகளிலும் உணரப்பட்டது.

காஷ்மீரில் படப்பிடிப்பில் இருந்த, நடிகர் கதிர், நடிகை பிரியா ஆனந்த் உள்ளிட்ட 'லியோ' படக்குழுவினர், நில அதிர்வை உணர்ந்து, பீதி அடைந்தனர்; உடனே, ஹோட்டல் அறையை விட்டு வெளியேறினர்.

இதையடுத்து, படத்தை தயாரிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில், 'காஷ்மீரில் நாங்கள் பாதுகாப்பாக உள்ளோம்' என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தளபதி விஜய் சென்னை திரும்பினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு