யாழ்.நாகர்கோவிலில் வெளிமாவட்ட மீனவரின் படகுகள் தீக்கிரை!

ஆசிரியர் - Editor I
யாழ்.நாகர்கோவிலில் வெளிமாவட்ட மீனவரின் படகுகள் தீக்கிரை!

யாழ்.வடமராட்சி கிழக்கு - நாகர்கோவில் மேற்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரயாக்கப்பட்டுள்ளது.

கடலட்டை தொழிலில் ஈடுபட்டுவந்த படகுகள் தற்போது தொழிலில் ஈடுபடாமல் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயம் அதிகாலை 2 மணியளவில் தீயிடப்பட்டுள்ளது.

புத்தளம், தில்லையடி, அல்ஜித்தா எனும் முகவரியில் வசிக்கும் சாகுல் ஹமீது ஜௌபர் என்பவருக்குச் சொந்தமான படகுகளே இவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான காரணமோ, சந்தேக நபர்களோ இதுவரை அறியப்படவில்லை. சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் 

மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு