புதினை கைது செய்ய உத்தரவு!! -இதுதான் ஆரம்பம் என்கிறார் உக்ரைன் ஜனாதிபதி-

ஆசிரியர் - Editor II
புதினை கைது செய்ய உத்தரவு!! -இதுதான் ஆரம்பம் என்கிறார் உக்ரைன் ஜனாதிபதி-

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்து வரும் நிலையில் நெதர்லாந்தின் ஹாக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

உக்ரைன் நாட்டு குழந்தைகளை ரஷிய ஜனாதிபதி புதின் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக புதிய குற்றச்சாட்டு எழுந்தன. இது குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. 

இதற்கிடையே, போர்க் குற்றம் புரிந்ததாக கூறி ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதினை கைது செய்ய உத்தரவு பிறப்பித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், ஜனாதிபதி புதினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவு குறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறுகையில், வரலாற்று சிறப்புமிக்க முடிவு, இதுதான் ஆரம்பம் என தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு