வடகொரியா ஜனாதிபதி குறித்த தகவல்களை இணையதில் தேடியவருக்கு மரண தண்டனை

ஆசிரியர் - Editor II
வடகொரியா ஜனாதிபதி குறித்த தகவல்களை இணையதில் தேடியவருக்கு மரண தண்டனை

வடகொரியா நாட்டின் ஜனாதிபதி தொடர்பாக இணையதளத்தில் தகவல் தேடியதற்காக உளவுத்துறை அதிகாரி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

அந்நாட்டில் ஜனாதிபதி கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. அங்குள்ள மக்கள் வெளியுலகம் தொடர்பில் தெரிந்து கொள்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அங்கு பொதுமக்கள் இணையத்தை பயன்படுத்த அனுமதி இல்லை. அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அதிகாரிகளுக்கு மட்டுமே இணையத்தை பயன்படுத்த அனுமதி உள்ளது. அதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.

அதாவது அவர்கள் இணையத்தில் என்ன தேடுகிறார்கள் என்பதை கண்காணிக்க தனியே ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழு அவ்வப்போது அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். அந்த வகையில் அண்மையில் ஜனாதபதிக்கு வழங்கப்பட்ட அறிக்கையில் அவர் தொடர்பிலான தகவல்களை ஹபியூரோ 10' என அழைக்கப்படும் உளவுத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் இணையத்தில் தேடியதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் கடும் கோபம் அடைந்த ஜனாதிபதி கிம் ஜாங் உன், அவருக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டார். நாட்டின் உயர் பதவியில் உள்ள உளவுத்துறை அதிகாரி ஒருவருக்கே மரண தண்டனை வழங்கி இருப்பது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு