யாழ்.புறநகர் பகுதிகளில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து பாலியல் துஷ்பிரயோகம்! பொலிஸாருக்கு கசிந்த அதிர்ச்சி தகவல்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.புறநகர் பகுதிகளில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து பாலியல் துஷ்பிரயோகம்! பொலிஸாருக்கு கசிந்த அதிர்ச்சி தகவல்கள்..

யாழ்.புறநகர் பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கும் கும்பல் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றனர். 

யாழ்.நகர் புற பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கும்பல் ஒன்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு மாணவர்களை உள்ளாக்கி வருவது தொடர்பில் பொலிஸாருக்கு இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் 

கும்பலை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.குறித்த நபர்கள் மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதாகவும், 

அவற்றினை காணொளி பதிவாக கையடக்க தொலைபேசிகளில் பதிவு செய்து , அதனை காண்பித்து தொடர்ந்து தமது இச்சைகளுக்கு மாணவர்களை பயன்படுத்தி வந்ததுடன் , மாணவர்களிடம் இருந்து பணமும் பெற்று வந்துள்ளனர்.

இவை குறித்த தகவல்கள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அக்கும்பலை சேர்ந்தவர்களை அடையாளம் கொண்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்தவற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகள் வரை கவனம் செலுத்தியுள்ள நிலையில் விசாரணை நடவடிக்கைகள் குற்றப் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்படலாம் என கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு