தலையும் வாயும் இல்லாமல் பிறந்த குழந்தை

ஆசிரியர் - Editor II
தலையும் வாயும் இல்லாமல் பிறந்த குழந்தை

இந்தியா நாட்டின் ஒடிசா மாநிலத்தில், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் தலை மற்றும் வாய் இல்லாத அபூர்வ மற்றும் விசித்திரமான குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

மயூர்பஞ்ச் மாவட்டத்தின் சரஸ்கானா பிளாக்கிற்கு உட்பட்ட குலபடா கிராமத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

குழந்தையின் பெற்றோர் சுடாமணி ஹன்ஸ்தா மற்றும் பப்லு மகாரானா என அடையாளம் காணப்பட்டனர்.

ஆதாரங்களின்படி, சுடாமணி பிரசவ வலியாழ் துடித்ததை அடுத்து ஆம்புலன்ஸில் பாங்கிரிபோசி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், மருத்துவமனைக்குச் செல்வதற்குள் அவசர வாகனத்திலேயே அவர் தனது குழந்தையைப் பெற்றெடுத்தார்.

குழந்தை வாயும் தலையும் இல்லாமல் பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டது. சுடாமணி பாங்கிரிபோசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தலையின்றி குழந்தை பிறந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு