விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் போராளி வெளிநாடு செல்வதற்கு போலி ஆவணங்களை தயாரித்துக் கொடுத்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

ஆசிரியர் - Editor I
விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் போராளி வெளிநாடு செல்வதற்கு போலி ஆவணங்களை தயாரித்துக் கொடுத்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் போராளி ஒருவர் வெளிநாடு செல்வதற்கு போலி ஆவணங்களை தயாரித்துக் கொடுத்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொக்கட்டிச்சோலையை சேர்ந்த குறித்த பெண் வெள்ளவத்தையில் வசிப்பதாக போலி ஆவணங்களை தயாரிப்பதற்கு பொலிஸ் உத்தியோகத்தர் உதவியதாக அவரை கைதுசெய்த பயங்கரவாத விசேட பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேற்படி பெண் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவேளை கைதுசெய்யப்பட்டார் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன. வாழைத்தோட்ட பொலிஸ் பிரிவை சேர்ந்த 

பொலிஸ் உத்தியோகத்தரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு