மனைவியை கத்தியால் குத்திய கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்! மனைவியின் உடலில் சிகரெட் வாசனை வந்ததாக தர்க்கம்...

ஆசிரியர் - Editor I
மனைவியை கத்தியால் குத்திய கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்! மனைவியின் உடலில் சிகரெட் வாசனை வந்ததாக தர்க்கம்...

மனைவியின் உடலில் சிகரெட் வாசனை வந்ததால் ஆத்திரமடைந்த கணவனின் கத்திக்குத்துக்கு இலக்கான மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கணவன் யாழ்ப்பாணத்திற்கு தனது அலுவல் நிமித்தமாக வந்துவிட்டு மீண்டும் 

மாலை வீடு திரும்பிய நிலையில் மனைவியின் உடலில் சிகரெட் வாசனை வந்ததாக இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

வாய்ந்த தர்க்கம் முற்றிய நிலையில் கணவன் மனைவியை கத்தியால் குத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் காயமடைந்த மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கணவன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு