குடும்பஸ்த்தர் மீது 10 பேர் கொண்ட வாள்வெட்டு கும்பல் தாக்குதல் முயற்சி! திருப்பி தாக்கியதால் தப்பி ஓட்டம், 3 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
குடும்பஸ்த்தர் மீது 10 பேர் கொண்ட வாள்வெட்டு கும்பல் தாக்குதல் முயற்சி! திருப்பி தாக்கியதால் தப்பி ஓட்டம், 3 பேர் கைது..

கிளிநொச்சி - தருமபுரம் பகுதில் 10 பேர் கொண்ட வாள்வெட்டு கும்பலின் தாக்குதலில் இருந்து குடும்பஸ்த்தர் ஒருவர் தப்பியுள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்றுமுன்தினம் இரவு கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய குடும்பஸ்த்தரை வழிமறித்த 10 பேர் கொண்ட வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. 

இதன்போது குடும்பஸ்த்தர் தனது கையிலிருந்த தலைக்கவசத்தால் திருப்பித் தாக்கியுள்ளார். இதனால் நிலைகுலைந்த தாக்குதல் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது, 

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை நடத்தினர். 

இதன்போது வாள்வெட்டு கும்பலால் கைவிடப்பட்ட 2 வாள்களை பொலிஸார் மீட்டுள்ளதுடன், தொடர்ச்சியான விசாரணைகளின் அடிப்படையில் 3 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு