உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

உழவு இயந்திரம் வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 34 வயதான உழவு இயந்திர சாரதி உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் மட்டக்களப்பு- ஆயித்தியமலை பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றிருக்கின்றது. 

சம்பவத்தில் ஆயித்தியமலை - நெல்லூரைச் சேர்ந்த 34 வயதுடைய தர்மதாசா சதீஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த வயலில் சம்பவதினமான இன்று பிற்பகல் உழவு இயந்திரத்தால் உழும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது 

வயலில் உழவு இயந்திரத்தின் பின்பக்க ரயர்கள் புதைந்ததையடுத்து உழவு இயந்திர முன்பகுதி மேல் எழுந்து தலைகீழக கவிழ்ந்ததில் 

சாரதி துாக்கி வீசப்பட்டுள்ளார் இதன்போது கலப்பையில் தலை அடிபட்ட நிலையில் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அவரை பொலிசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு