திடீரென வீட்டிற்குள் நுழைந்து தாக்கிய குரங்குகள் கூட்டம்!! -பரிதாபமாக உயிரிழந்த மூதாட்டி-

ஆசிரியர் - Editor II
திடீரென வீட்டிற்குள் நுழைந்து தாக்கிய குரங்குகள் கூட்டம்!! -பரிதாபமாக உயிரிழந்த மூதாட்டி-

இந்திய மாநிலம் தெலங்கானாவில் குரங்குகள் கூட்டமாக சென்று தாக்கியதில் 70 வயது மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் ராமரெட்டி கிராமத்தில் குரங்குகள் அதிகளவில் உள்ளன. இந்த குரங்குகள் அடிக்கடி வீதிகளில் நடமாடுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று நர்சவ்வா என்ற மூதாட்டி ( வயது 70) ஒருவரின் வீட்டிற்குள் 20க்கும் மேற்பட்ட குரங்குகள் நுழைந்துள்ளன. அங்கு பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த அவரை சரமாரியாக அந்த குரங்குகள் தாக்கியுள்ளன. இதில் அவர் படுகாயமடைந்தார்.

குரங்குகள் கூட்டமாக வருவதைக் பார்த்த கிராம மக்கள், வீடுகளுக்குள் சென்று கதவை போட்டிக்கொண்டனர். அவை கிராமத்தை விட்டு வெளியேறிய பின்னரே மூதாட்டி தாக்கப்பட்டது அவர்களுக்கு தெரிய வந்தது.

படுகாயத்துடன் இருந்த அவரை மீட்ட அயலவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், சனிக்கிழமையன்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு