இத்தாவில் பகுதியில் வீடொன்றின் முற்றத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு!

ஆசிரியர் - Editor I
இத்தாவில் பகுதியில் வீடொன்றின் முற்றத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு!


பளை - இத்தாவில் பகுதியில் வீடு ஒன்றின் முற்றத்தில் பச்சை நிற சீருடை துணி ஒன்றினை வீட்டு உரிமையாளர் அவதானித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த இடத்தில் வீட்டு உரிமையாளரால் தோண்டப்பட்டபோது வெடிபொருட்கள் இருப்பதை அவதானித்தனர்.

உடனடியாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிபடையினர் தோண்டப்பட்ட குழியினுள் இருந்து வெடிபொருட்கள் சிலவற்றை மீட்டெடுத்துள்ளனர்.

இதில் 02 கைக்குண்டுகள் மற்றும் 175 ரவைகள், 01 மகசின் என்பன மீட்கப்பட்டுள்ளது. குறித்த வெடிப்பொருட்கள் யுத்த காலத்தில் பயன்படுத்தியது எனவும் அ

வை செயலிழந்துள்ளது எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு