விபத்தில் காயமடைந்த மகன் உயிரிழப்பு, அதிர்ச்சியில் தாயும் உயிரிழந்த சோகம்...!

ஆசிரியர் - Editor I
விபத்தில் காயமடைந்த மகன் உயிரிழப்பு, அதிர்ச்சியில் தாயும் உயிரிழந்த சோகம்...!

மகன் உயிரிழந்த தகவல் அறிந்த தாய் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

வவுனியா நெடுங்கேணி பகுதியில் மாடு முட்டி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

இராசரட்ணம் கனகராஜா என்ற 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

குறித்த மரண செய்தியை அறிந்த குறித்த தாயாரான இராசரட்ணம் வீரம்மா என்ற 82 வயதுடைய முதியவரும் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் பிரதேச மக்களை சோகத்துக்குள்ளாக்கியுள்ளது.

இருவரது மரண சடங்குகளும் கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியில் இடம்பெறவுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு