ஒருவருக்கொருவர் கணவர்களை மாற்றி திருமணம் செய்துகொண்ட இரு பெண்கள்

ஆசிரியர் - Editor II
ஒருவருக்கொருவர் கணவர்களை மாற்றி திருமணம் செய்துகொண்ட இரு பெண்கள்

ந்தியாவின் பீகாரில் திருமணமான இரண்டு பெண்கள் ஒருவருக்கொருவர் தத்தமது கணவர்களை மாற்றி திருமணம் செய்துகொண்ட வித்தியாசமான நிகழ்வு ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த விசித்திர சம்பவத்தில் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், இரு பெண்களுக்கும் ரூபி தேவி என்ற ஒரே பெயர் தான்.

நீரஜ் குமார் சிங் என்பவரும் ரூபி தேவி என்ற பெண்ணும் 2009 இல் திருமணம் செய்து கொண்டனர். அவர்ளுக்கு இரு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் என 4 குழந்தைகள் உள்ளனர்.

ஆனால் ரூபி மற்றொரு திருமணமான முகேஷ் குமார் சிங் என்பவரை காதலித்துள்ளார். அந்த நபர் ரூபியின் பெற்றோரின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்துள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில், ரூபி முகேஷ் மற்றும் அவரது 3 குழந்தைகளுடன் அவரை திருமணம் செய்து கொள்ள ஓடிவிட்டார். நீரஜிடம் ஒரு பெண் குழந்தையை விட்டுச் சென்றார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நீரஜ் முகேஷின் மனைவியைத் தொடர்பு கொண்டுள்ளார். அவரது பெயரும் ரூபி தேவி தான் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டார்.

பின்னர், இவர்கள் இருவரும் தொலைபேசியில் பேச ஆரம்பித்து ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்தனர். ஒரு வருடம் கழித்து, அவர்களும் பெப்ரவரி 18 ஆம் திகதி அன்று திருமணம் செய்து கொண்டனர்.

நீரஜ் முஸ்கேஷின் குழந்தைகளையும் ஏற்றுக்கொண்டார். தம்பதிகள் இருவரும் இப்போது மத்திய பிரதேசத்தில் வெவ்வேறு நகரங்களில் வசிக்கின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு