மகளிர் ரி-20 உலக கோப்பை!! -இந்தியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது அவுஸ்ரேலியா-

ஆசிரியர் - Editor II
மகளிர் ரி-20 உலக கோப்பை!! -இந்தியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது அவுஸ்ரேலியா-

தென்னாபிரிக்காவில் நடைபெறும் மகளிர் ரி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டதை எட்டி உள்ளது. இதன்படி 'ஏ' பிரிவில் அவுஸ்ரேலியா (8 புள்ளி) முதலிடமும், தென்னாப்பிரிக்க (4 புள்ளி) 2 ஆவது இடமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து (8 புள்ளி) முதலிடமும், இந்தியா (6 புள்ளி) 2 ஆவது இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. 

இந்த நிலையில் கேப்டவுனில் இன்று வியாழக்கிழமை நடைபெறும் முதல் அரையிறுதியில் அவுஸ்ரேலியா - இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

நாணயச்சுழற்சியில் வென்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன்படி முதலில் ஆடிய அவுஸ்திரேலியா 20 பந்துப் பரிமாற்றங்களின் முடிவில் 4 இலக்குகளை இழந்து 172 ஓட்டங்களை எடுத்தது. 

இந்தியா தரப்பில் ஷிகா பாண்டே 2 இலக்குகளை சாய்த்தார்.இதையடுத்து 173 ஓட்டங்கள் எடுத்தால் என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

இதன்படி இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் 8 இலக்குகளை இழந்து 167 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதனால் அவுஸ்ரேலியா அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு