பாடசாலைக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு!! -கனடாவில் பட்டப்பகலில் கொடூர சம்பவம்-

ஆசிரியர் - Editor II
பாடசாலைக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு!! -கனடாவில் பட்டப்பகலில் கொடூர சம்பவம்-

கனடா நாட்டின் ரொறன்ரோ பகுதியில் பாடசாலைக்குள் புகுந்து மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மாணவர் ஒருவர் காயங்களுடன் தப்பியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ரொறன்ரோவில் அமைந்துள்ள வெஸ்டன் சோல்கிட் நிறுவன பாடசாலை வளாகத்திலேயே பகல் 12 மணி கடந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், ரொறன்ரோ மாவட்ட பாடசாலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்டவர் தொடர்புடைய பாடசாலை மாணவர் என்பதை உறுதிப்படுத்தியது மட்டுமின்றி, ஒரு மாணவர் காயங்களுடன் தப்பியுள்ளார், அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

சம்பவத்தை அடுத்து மாணவர்கள் அனைவரையும் அருகாமையில் அமைந்துள்ள வேறு பாடசாலைக்கு பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதனிடையே, துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் அப்பகுதியில் இருந்து மாயமாகியுள்ளதாகவும், முதற்கட்ட விசாரனை முடியும் வரையில், தாக்குதல்தாரி தொடர்பில் தகவல் எதையும் வெளியிடுவதில் சிக்கல் இருப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு