துருக்கி நிலநடுக்கத்தில் இலங்கை கண்டியைச் சேர்ந்த பெண் மரணம்!! -இலங்கைத் தூதரகம் தகவல்-

ஆசிரியர் - Editor II
துருக்கி நிலநடுக்கத்தில் இலங்கை கண்டியைச் சேர்ந்த பெண் மரணம்!! -இலங்கைத் தூதரகம் தகவல்-

துருக்கியில் நடந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களில் இலங்கை கண்டியை சேர்ந்த பெண்ணும் ஒருவர் அடங்குவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை கண்டியை சேர்ந்த 64 வயதான குறித்த பெண் அங்கு வசித்து வந்த நிலையில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பின்னர் காணாமல் போனதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் அவரது மகளால் அவர்  அடையாளம் காணப்பட்டுள்ளதாக துருக்கியிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தின் கலகெதர பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த பெண் 20 வருடங்களுக்கு முன்னர் துருக்கிக்கு சென்றதாக துருக்கியிலுள்ள இலங்கை தூதரகம் மேலும் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து, தூதுவர் ஹசந்தி உருகொடவத்த திஸாநாயக்க வெளியிட்ட அறிக்கையில், “கஹ்ரமன்மராஸ் பகுதியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட இலங்கைப் பெண் தற்போது இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 

உண்மையில் 3 நாட்களாக அவரது மகளும் அந்தப் பகுதியில் இருந்ததால், கஹ்ரமன்மராஸ் பகுதியில் தனது உயிரைக் காப்பாற்றிய இலங்கை போதகருடன் தூதரகம் ஒருங்கிணைத்து வந்தது. 

நாங்கள் அவர்களுடனும் AFAD-யுடனும் ஒருங்கிணைத்தோம், இதனால் அவர்கள் கட்டிடம் இருந்த இடத்திற்குச் சென்று இடிபாடுகளை அகற்றும் செயல்முறையைத் தொடங்கினோம்".

"ஆனால் பின்னர் மிகுந்த முயற்சியால், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடிபாடுகளுக்கு அடியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது மற்றும் அவரது மகள் எச்சங்களை அடையாளம் கண்டார்" என்று அவர் கூறினார்.

உயிரிழந்த பெண்ணின் மகளுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தூதுவர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். இறந்தவரின் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள அதிகாரிகள் உட்பட அனைவருடனும் தூதரகம் செயல்பட்டு வருகிறது என்றார்.

முன்னதாக, துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருப்பதாக நம்பப்படும் 14 இலங்கையர்களில் 13 பேரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்தார்.

நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டடத்தில் வசித்த உயிரிழந்த பெண், சம்பவம் இடம்பெற்ற போது அங்கு இருக்கவில்லை எனவும் அவர் தொடர்பில் தொடர்பு கொள்ளவில்லை எனவும் தூதுவர் ஹசந்தி பிப்ரவரி 6 ஆம் திகதி தெரிவித்திருந்தார்.

மேலும், துருக்கியில் வாழும் இலங்கையர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் இருந்தால் தெரிவிக்குமாறும் தூதுவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு