மணமேடையில் மணமகன் செய்த காரியம்!! -கோபத்தில் உடனே திருமணத்தை நிறுத்திய மணப்பெண்-

ஆசிரியர் - Editor II
மணமேடையில் மணமகன் செய்த காரியம்!! -கோபத்தில் உடனே திருமணத்தை நிறுத்திய மணப்பெண்-

இந்தியாவில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் மணமகன் கையை பிடித்து இழுத்ததால் மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாநிலம் உத்தர பிரதேசத்தில், பிரோசாபாத் மாவட்டம் காயிர்கார் நகரத்தில் ஆதேஷ் என்பவருக்கும், மனோஜ் குமாரி என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

அதனைத் தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் நடந்தது. திருமண ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு விருந்தினர் இல்லத்திற்கு வந்து சேர்ந்தது.

அதன் பின் இரவு உணவு முடிந்து மணமக்கள் இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சிக்கு தயாராகினர்.

அப்போது மணமகன் சற்று முன்பே மணமேடைக்கு வந்துவிட, மணமகள் வர தாமதமானது. பொறுமையாக அவர் நடந்து வருவதைப் பார்த்த ஆதேஷ், உடேன வேகமாக சென்று மனோஜ் குமரியின் கையைப் பிடித்து இழுத்து வந்துள்ளார்.

இதனால் அவர் மேடையில் தவறி விழுந்தார். இது மணமகளுக்கு கோபத்தை ஏற்படுத்தவே திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இருவரது குடும்பத்தினரும் அவரை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவரோ தனது முடிவில் உறுதியாக இருந்தார். இந்த விவகாரம் பொலிஸாருக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இருப்பினும், மணமகள் பிடிவாதமாக இருந்ததால் ஊர்வலம் திரும்பி சென்று திருமணம் நிறுத்தப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு