இந்தியா - இலங்கை இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து!! -அண்ணாமலை நம்பிக்கை-

ஆசிரியர் - Editor II
இந்தியா - இலங்கை இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து!! -அண்ணாமலை நம்பிக்கை-

இந்தியா - இலங்கை நாடுகளுக்கு இடையே மிக விரைவில் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என்று தமிழக பா.ஜ தலைவர் அண்ணாமலை தகவல்  தெரிவித்துள்ளார்.

சென்னை பாலவாக்கம் கடற்கரையில் பாடசாலை மாணவர்களுக்கு மரக்கன்றுகளை தமிழக பா.ஜ தலைவர் அண்ணாமலை வழங்கினார். பின், அவர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

பா.ஜ அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளது. மிக விரைவில் இந்தியா - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு