ஒன்றாக இருந்து மதுபானம் அருந்திவிட்டு, நிறைபோதையில் நண்பனை கிணற்றில் தள்ளி கொலை செய்த கும்பல்..! 3 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
ஒன்றாக இருந்து மதுபானம் அருந்திவிட்டு, நிறைபோதையில் நண்பனை கிணற்றில் தள்ளி கொலை செய்த கும்பல்..! 3 பேர் கைது..

ஒன்றாக இருந்து மதுபானம் அருந்திவிட்டு நண்பனை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் புதுக்குடியிருப்பு - உடையார்கட்டு வெள்ளப்பள்ளம் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

நேற்று முன்தினம் 5ம திகதி இளைஞன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். 

அதே பகுதியை சேர்ந்த 21 அகவையுடைய விஜயராசா யசீகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளர்.

நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தவேளை நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினை தொடர்ந்து 

ஏனைய மூன்று நண்பர்களால் குறித்த இளைஞன் கிணற்றுக்குள் தள்ளி வீழ்த்தப்பட்டுள்ளார். 

இவரது உயிரிழப்பில் சந்தேகம் ஏற்படுவதாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். 

உயிரிழந்த இளைஞனின் சடலத்தில் கீறல் காயங்களும் காணப்பட்டுள்ளன இதனையடுத்து வாக்குமூலங்களின் அடிப்படையில் 

விசாரணையினை தொடர்ந்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை புதுக்குடியிருப்பு கைது செய்துள்ளனர். 

இவர்கள் நேற்று 06 முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேதபரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு