சுகயீனமடைந்துள்ள மனைவிக்கு இளநீர் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய 3 பிள்ளைகளின் தந்தை தவறி விழுந்து பலி!

ஆசிரியர் - Editor I
சுகயீனமடைந்துள்ள மனைவிக்கு இளநீர் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய 3 பிள்ளைகளின் தந்தை தவறி விழுந்து பலி!

நோயாளியான தனது மனைவிக்கு இளநீர் பறிப்பதற்காக தென்னையில் ஏறிய 42 வயான 3 பிள்ளைகளின் தந்தை மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் மட்டக்களப்பு - சித்தாண்டி பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் சிவகுரு குமாரசாமி (வயது 47) என்ற 3 பிள்கைளின் தந்தை உயிரிழந்தார். 

நேற்று திங்கட்கிழமை (6) முற்பகல் 11.30 மணியளவில் தனது வீட்டு முற்றத்தில் நிற்கும் சுமார் 50 அடி உயரமான தென்னை மரத்தில் ஏறி 

நோயாளியான தனது மனைவிக்காக இளநீரை பறிப்பதற்காக ஆயத்தமானபோது கால் வழுக்கி சடுதியாக நிலத்தில் விழுந்துள்ளார்.

தந்தை நிலத்தில் விழுவதை அவதானித்த மூன்று பிள்ளைகளும் தந்தையை காப்பாற்ற அயலவர்களை சத்தமிட்டு அழைத்துள்ளதுடன் 

பின்னர் அயலவர்கள் உதவியுடன் மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, அவர் மரணமடைந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீருடன் சம்பவ இடத்துக்கு சென்ற சந்திவெளி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர். 

தென்னை மரத்திலிருந்து விழுந்து மரணித்தவரின் உடலின் வெளிப்புற பகுதிகளில் காயங்கள் ஏதுமில்லாததால், 

பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, பிரேத பரிசோதனை முடிவுற்றதும் 

சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு, மரண விசாரணை அதிகாரி பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு